×

எதிர் அணியினர் செய்து வரும் பொய் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி பேச்சு

கரூர், ஏப்.4: கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று கரூரில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரீகன் வரவேற்று பேசினார். மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், சொத்துபாதுகாப்புக் குழுசெயலாளர் கே.சி.பழனிசாமி, முன்னாள் அமைச்சர் சின்னசாமி, ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
 கரூர் பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆதரவு கேட்டு பேசுகையில், எதிர் அணியினர் செய்துவரும் பொய்பிரசாரத்தை முறியடிக்க வேண்டும். மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதபோக்கினை மக்களிடம் விளக்கும் வகையில் செயல்பட வேண்டும். தகவல் தொழில்நுட்ப அணி சிறப்பாக செயல்படுகிறது. மேலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிதேடித்தர வேண்டும் என்றார்.

 திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளரும், எம் எல்ஏவுமான பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்.திமுக ஏதோ இந்து மதத்திற்குஎதிரானது என பொய்பிரசாரம் செய்துகொண்டிருக்கின்றனர்.கோயிலை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியவில்லையே என்ற கூட்டம் தான் நம்மை எதிரானவர்கள் என கூறிக்கொண்டிருக்கின்றது. இதுபோன்ற தகவல்களை நாம் அம்பலப்படுத்தி நாம் யாருக்கும் எதிரானவர்கள்அ ல்ல என்பதை அணி நிர்வாகிகள் இணைய தளம் வாயிலாக தெரிவிக்க வேண்டும். பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும். இந்த அணி மிகசிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார்.

Tags : Jyoti Bai ,Congress ,
× RELATED நெல்லை காங்., தலைவர் ஜெயக்குமார் கொலை...